Skip to main content

இந்தியாவில் இதுவரை 36.47 கோடி கரோனா பரிசோதனைகள்!

Published on 06/06/2021 | Edited on 06/06/2021

 

Corona for 2.88 crore people in India so far!

 

இந்தியாவில் இதுவரை 2.88 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய சுகாதாரத்துறை இன்று (05.06.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 2,88,09,339 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 1,14,460  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் ஒரேநாளில் 1,89,232 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,69,95,549 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.38 சதவீதமாக இருக்கிறது. அதேபோல்  உயிரிழப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 2,677 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,46,759 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு 14,77,799 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

இந்தியாவில் இதுவரை 36.47 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 20,36,311 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்