Skip to main content

இந்தியாவில் இதுவரை 2.85 கோடி பேருக்கு கரோனா!  

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

Corona for 2.85 crore people in India so far!

 

இந்தியாவில் இதுவரை 2.85 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய சுகாதாரத்துறை இன்று (04.06.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 2,84,41,986 லிருந்து 2,85,74,350 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 1.32 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒருநாள் தொற்று எண்ணிக்கை 1.32 லட்சமாக இருந்த நிலையில், நேற்று 1.34 லட்சமாக இருந்தது. இன்று 1.32 லட்சமாக மீண்டும் குறைந்துள்ளது.

 

இந்தியாவில் ஒரேநாளில் 2,07,071 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,65,97,655 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 92.79 சதவீதமாக இருக்கிறது. அதேபோல்  உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 2,713 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,40,702 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாக்கு 16,35,993 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்