உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது பாரபங்கி. இங்குள்ள காலனி பகுதியில் வசித்து வரும் வினய்குமார், தன் பக்கத்து வீட்டுப் பெண்ணான நேஹா வெர்மாவுடன் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலை இருவீட்டாரும் எதிர்த்த நிலையில், அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் இருவரையும் காணவில்லை என முகமதுபூர் காலா பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
பொதுவாக இதுமாதிரியான விவகாரங்களில் சம்மந்தப்பட்டவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகளை காவல்துறையினர் ஏற்படுத்தித் தந்ததாக செய்திகள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு காவல்நிலையமே திருமண மண்டபமாக மாற்றப்பட்டு, காவல்துறையினர் தலைமையில் ஒரு திருமணம் நடைபெற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.