புதிதாகசமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கானகாப்புத்தொகைஅதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, ஒருசிலிண்டர்என்றால் இதுவரை 1,450 ரூபாய்காப்புத்தொகைப்பெறப்பட்டுள்ளது. இதை 2,200 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதுவே இரண்டுசிலிண்டர்பெற விரும்பினால் 2,900 ரூபாயாக இருந்தகாப்புத்தொகை4,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐந்து கிலோசிலிண்டர்பெற விண்ணப்பித்தால்,காப்புத்தொகை800ரூபாயிலிருந்து1,150 ஆக அதிகரித்துள்ளது.ரெகுலேட்டர்காப்புத்தொகையும்150ரூபாயிலிருந்து250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.