Skip to main content

எங்கு பிறந்தார் அனுமார்? - திருப்பதி தேவஸ்தானத்தின் புத்தகத்தால் சர்ச்சை!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

hanumar

 

இராமாயணத்தின்படி, அனுமார் இராமரின் தீவிர பக்தர். கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்க இராமருக்கு உதவியவர். இராம பக்தர்கள், அனுமாரையும் வழிபட்டு வருகிறார்கள். அனுமார் கர்நாடக மாநிலம் ஹம்பி அருகிலுள்ள அஞ்சனாத்ரியில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இந்தநிலையில், திருப்பதி தேவஸ்தானம், அனுமார் ஆந்திராவில் பிறந்ததாக கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

திருப்பதி தேவஸ்தானம், திருப்பதியில் உள்ள ஏழுமலைகளில் ஒன்றில்தான் அனுமார் பிறந்தார் என்றும், இதை நிரூபிக்கும் வகையில் யுகாதி வருட பிறப்பான இன்று (13.04.2021), புத்தகம் ஒன்றை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கர்நாடக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததோடு, திருப்தி தேவஸ்தானம் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், ஆய்வாளர்கள் மத தலைவர்களோடு விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளது.

 

கர்நாடகாவைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள், அனுமார் பிறந்தது கர்நாடகத்தில்தான் எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அனுமார் பிறந்ததாக கருதப்படும் பகுதியில், மனிதர்களுக்கு வால் இருப்பது போன்ற குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. எனவே வானரர்கள் என்பது வாலை உடைய மனித இனமாக இருக்கலாம். அவர்கள் இராமருக்கு உதவியிருக்கலாம் என்றும், மேலும் அங்கு பல அனுமார் சிற்பங்கள், கோவில்கள் உள்ளன. திருமலையில் அனுமார் சிற்பங்கள் கிடைக்கவில்லையே என கேள்வியெழுப்பியுள்ளனர். 

 

ஏற்கனவே இராமர் பிறந்த இடம் குறித்து நேபாள பிரதமர் பேசியது சர்ச்சையான நிலையில், அனுமார் பிறந்த இடம் குறித்தும் சர்ச்சை கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.