இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்டங்கள் நடந்து முடிந்த நிலையில் வரும் 19-ஆம் தேதி இறுதி கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக நவ்ஜோத் சிங் சித்து தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து ஏராளமான பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments