Advertisment

ராகுல் காந்தி வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்... டெல்லியில் பரபரப்பு...

மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ராகுலிடம் இந்த முடிவை திரும்ப பெறுமாறு பல முறை பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனாலும் தன் முடிவிலிருந்து பின்வாங்காத ராகுல், பதவி விலகுவதில் உறுதியாக இருப்பதாகவும், புதிய தலைவரை கட்சியின் உயர்மட்ட குழுவே தேர்ந்தெடுக்கும் எனவும் கூறினார்.

Advertisment

congress workers protest outside rahul gandhi's home in delhi

இந்த நிலையில் இன்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், முடிவை மாற்றிக்கொள்ள போவதில்லை எனவும் ராகுல்காந்தி கூறியுள்ளார். இதனையடுத்து ராகுல்காந்தி தான் தலைவராக தொடர வேண்டும் என காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என வலியுறுத்தி அவரது இல்லத்தின் முன் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராகுல் மீண்டும் தலைவராக தொடர வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

congress Delhi Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe