Advertisment

ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு... பெரும்பான்மையை நிரூபித்த அரசு...

congress wins rajasthan floor test

Advertisment

ராஜஸ்தானில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் அம்மாநில ஆட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோருடன்திங்கட்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார் சச்சின் பைலட். இந்தப் பேச்சுவார்த்தைச் சுமூகமாக நடைபெற்ற நிலையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டிற்குத் திரும்பினர். இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பெரும்பான்மையைக் காங்கிரஸ் கட்சி பெற்றது.

Sachin Pilot Rajasthan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe