Skip to main content

பாஜக தோல்வி, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்....

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
congress


அடுத்த வருடம் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய சட்டப்பேரவை தேர்தலாக ஐந்து மாநில தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், அந்த மாநிலங்கள் யாரெல்லாம் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. 
 

முதலில் ஏபிபி நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைபற்றும் என தெரிவிக்கப்பட்டது.
 

இதனை தொடர்ந்து டைம்ஸ் நவ், சிவோட்டர்ஸ் இணைந்து மூன்று மாநிலங்களில் தேர்தல் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிபெறும், மத்திய பிரதேசத்தில் பாஜகவே தக்கவைத்து கொள்ளும் என்று வெளியிட்டுள்ளது.
 

‘டீம் பிளாஷ்’ என்னும் நிறுவனம் தெலங்கானா மாநில தேர்தல் குறித்து நடத்திய கருத்து கணிப்பில், தற்போது அந்த மாநிலத்தை ஆளும் ராஷ்டிர சமிதி பெரும் வெற்றியைப்பெறும் என்று அறிவித்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்