பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அருகே ஜோடா பதக்கில் தசரா பண்டிகை நடைபெற்று கொண்டிருக்கும்போது, அந்த விழாவை பார்க்க வந்த பார்வையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகி பலியாகினர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த பாஜக செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ஹனி கூறியதாவது: இந்த தசரா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது காங்கிரஸ்தான். நவ்ஜோதித் சிங் சித்துவின் மனைவிதான் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இருந்தார். இந்த நிகழ்ச்சி பெர்மிசன் வாங்காமல் நடத்தப்பட்டது. ரயில் விபத்து நடந்தபோது கூட சித்துவின் மனைவி மேடையில் பேசிக்கொண்டிருந்தார் என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை பதிவிட்டுள்ளார்.
அமிர்தசரஸ் ரயில் விபத்துக்கு காங்கிரஸ்தான் காரணமா???
சார்ந்த செய்திகள்
Next Story
அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!
பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது.
இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
ரயிலில் பயங்கர தீ விபத்து; விரைந்த தீயணைப்புத் துறையினர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நான்டெட் நகரில் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில், பூர்ணா - பார்லி வழிச் செல்லும் ரயில் (வண்டி எண் : 07599) நின்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30 நிமிடத்திற்கு மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து, மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.