Advertisment

மோடி மாநிலத்தில் பிரியங்காவின் முதல் அதிகாரபூர்வ அரசியல் பேச்சு...

குஜராத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில், தண்டி யாத்திரையின் 89 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

Advertisment

priyanka

அதன் பின் இன்று பிற்பகலில் சர்தார் வல்லவாய் படேல் நினைவரங்கில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது குஜராத்தின் காந்திநகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியில் பொறுப்புக்கு வந்த பின் பிரியங்கா காந்தி பேசும் முதல் கூட்டமான இதில் அவர் உரையாற்றியபோது, "இந்தத் தேர்தல் எப்படி இருக்க போகிறது என்பதை நீங்கள் சரியாக சிந்திக்க வேண்டும். இந்த தேர்தலில் நீங்கள் என்ன தேர்வு செய்யப் போகிறீர்கள்? நீங்கள் உங்கள் எதிர்காலத்தை தேர்வு செய்யப் போகிறீர்கள். பயனற்ற பிரச்சினைகளை எழுப்புபவர்களை தவிருங்கள். நீங்கள் எழுப்பும் பிரச்சனைகள் எப்போதும் உங்கள் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்குமானதாக இருக்க வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்சினை, இவை தான் இந்த தேர்தலில் நீங்கள் தேர்வு செய்யவேண்டியது" என கூறினார்.

loksabha election2019 congress priyanka gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe