ADVERTISEMENT

"பா.ஜ.க.வுக்கு செல்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்"!- முதல்வர் நாராயணசாமி பேச்சு...

03:15 PM Jan 24, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

பா.ஜ.க.வுக்கு செல்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, "பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள்; பா.ஜ.க.வுக்கு செல்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். கூட்டணித் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும். அதைப் பேசி தீர்க்கலாம்; வெளியே சொல்லக் கூடாது. துணை நிலை ஆளுநரின் அலுவலகம், பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமாக உள்ளது.

புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரி- காரைக்காலுக்கு ராகுல்காந்தி மூன்று முறை வர உள்ளார். நேரு முதல் ராகுல்காந்தி வரையிலான காங்கிரஸ் தலைவர்கள் புதுச்சேரியின் மீது பாசம் கொண்டவர்கள். குடியரசு தின விழாவை அடுத்து 'கிரண்பேடியே திரும்ப போ' என கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். புதுச்சேரியில் ஜனவரி 26- ஆம் தேதி நடைபெறும் டிராக்டர் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT