Skip to main content

ஒடிஷா, தெலங்கானா மாநில முதல்வர்களை இழுக்க காங்கிரஸ் அணி புதிய வியூகம்!

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி மேற்கொண்டுள்ள தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு இழுக்க காங்கிரஸ் கட்சி புதிய வியூகம் வகுத்துள்ளது. இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

chandrababu naidu

 

அதே போல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி,  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகிய இருவரும் சந்திரபாபுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், இவர்களை சமாதானப்படுத்தி காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில கட்சிகளின் கூட்டணியில் இணைக்க சரத்பவார் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதே போல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளிடம் சேராத மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சியை கைப்பற்றும் எனவும், அதிக மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பில் கூறி உள்ளதால் சரத்பவாரின் தொலைப்பேசி அழைப்பை ஏற்க ஜெகன் மோகன் ரெட்டி மறுத்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் சரத்பவார் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சந்தித்து காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார்.