Skip to main content

ஜெகன் கட்சியில் இணைகிறார் காங்கிரஸ் அமைச்சர்! 

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

Malladi Krishna Rao - YS Jagan Mohan Reddy

    

புதுவை காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணராவ், அமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் விலகினார். ஆந்திர மாநிலத்தில் புதுச்சேரிக்கு சொந்தமான ஏனாம் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லாடி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். 

 

ஆந்திரா மாநிலத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் மீனவர் சமூகம் பெரும்பான்மையாக இருக்கிறது. மீனவர்கள் அடர்த்தியாக உள்ள இந்த 7 தொகுதிகளிலிம் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவரான மல்லாடி கிருஷ்ணராவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. 

 

அவரை தனது கட்சியில் இணைத்துக்கொள்ள விரும்பி, சமீபத்தில் அவரை ஹைதராபாத்துக்கு அழைத்திருந்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அதன்பேரில் ஜெகனை சந்தித்தார் மல்லாடி. அப்போது, ’’உங்களைப் போன்ற அனுபவ தலைவர்களும், ஆந்திராவில் செல்வாக்குமிக்கவருமான நீங்கள் ஆந்திர அரசியலில் இருக்க வேண்டும். ஒய்.யெஸ்.ஆர்.காங்கிரசுக்கு நீங்கள் வந்தால் ரொம்பவும் மகிழ்வேன்’’ என சொல்லியுள்ளார் முதல்வர் ஜெகன் மோகன். இதனை ஆமோதித்த மல்லாடி கிருஷ்ணராவ், புதுச்சேரி அரசின் அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். 

 

பதவி விலகுவதற்கு முன்பு, புதுவை முதல்வர் நாரயணசாமியிடம் இதுகுறித்து மல்லாடி தெரிவிக்க, அவரை சமாதானப்படுத்தியுள்ளார் நாரயணசாமி. ஆனால், அதனை மறுதலித்துவிட்டார். புதுவை அரசியலில் இருந்து விலகியிருக்கும் மல்லாடி கிருஷ்ணராவ், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் விரைவில் இணையவிருக்கிறார். 

 

தனது கட்சியில் இணையும் அவரை, ராஜ்யசபா எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்ப உத்தேசித்துள்ளாராம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!  புதுச்சேரி அரசியலில் இருக்கும் வரை, எம்.பி. வாய்ப்பு எப்போதுமே தமக்கு கிடைக்காது என்பதாலேயே ஆந்திர அரசியலுக்குள் நுழைய முடிவுசெய்து ஜெகனின் அழைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார் மல்லாடி கிருஷ்ணராவ் என்கிறார்கள் புதுவை காங்கிரஸார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.