Skip to main content

பிரக்யா முன்னிலையா..? வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே மாரடைப்பு வந்து உயிரிழந்த மூத்த தலைவர்...

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. இந்நிலையில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா முன்னிலையில் இருப்பதாய் கேட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து உயிரை விட்டுள்ளார்.

 

congress leader passed away at counting station

 

 

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் போபால் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூர் முன்னிலை பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் சிஹோர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரத்தன் சிங் தாகுர் போபால் வாக்கு எணிக்கை மையத்திற்கு வாக்கு நிலவரம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரக்யா முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை கேட்டு சிறிது நேரத்திலேயே அவர் அங்கேயே மாரடைப்பு வந்து சரிந்து விழுந்துள்ளார்.  உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கத்தியைக் கூர்மையாக வைத்திருங்கள்; என்ன நிகழும் என யாருக்கும் தெரியாது” - சாத்வி பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

“Keep the knife sharp; Nobody knows what will happen” Sathvi Pragya Singh Controversy Speech

 

போபால் பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கர்நாடக மாநிலம் ஷிவ்மோகாவில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகே தெற்கு மண்டல வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

கூட்டத்தில் பேசிய அவர், “இந்த உலகில் பாவம் செய்பவர்களையும் அடக்குமுறை செய்பவர்களையும் அப்புறப்படுத்துங்கள். அவர்களை அப்புறப்படுத்தும் வரை அன்பின் உண்மையான அர்த்தம் வாழாது என சந்நியாசிகள் கூறுவார்கள். அதனால், லவ் ஜிகாத்தில் ஈடுபடுபவர்களையும் பாவிகளைப் போலவே நடத்த வேண்டும்.

 

உங்கள் பெண் குழந்தைகளை லவ் ஜிகாத் செய்பவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு நற்பண்புகளைச் சொல்லிக்கொடுங்கள். அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஜிகாத் செய்கிறார்கள். அது அவர்களின் பாரம்பரியம். ஏதும் செய்ய முடியாவிட்டால் லவ் ஜிகாத் செய்கிறார்கள். இந்துக்களும் தான் அன்பு செய்கிறோம். ஒரு சந்நியாசி இறைவனை அன்பு செய்கிறார். ஆனால், அவர்கள் அன்பிலும் ஜிகாத் செய்கிறார்கள்.

 

உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். ஆயுதங்கள் இல்லாவிட்டால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். எப்போது என்ன விதமான சூழல் நிகழும் என யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. உங்களது வீடுகளில் யாராவது நுழைந்து உங்களைத் தாக்கினால் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பது உங்கள் உரிமை.

 

கிறிஸ்தவ மிசினரிகளால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பாதீர்கள். அங்கே உங்கள் குழந்தைகள் உங்களுடையதாக இருக்க மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

 

பாஜக எம்.பி.யின் இந்த பேச்சிற்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் டெஹ்சீன் பூனாவாலா காவல்துறையில் பிரக்யா சிங் மேல் புகாரளித்துள்ளார். மேலும், சாத்வி பிரக்யா சிங் மீது காவல்துறையில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Next Story

"நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்" - ஷாருக்கானை எச்சரித்த பா.ஜ.க எம்.பி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

pathaan movie issue bjp mp Pragya Singh Thakur warned Shah Rukh khan

 

ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் 'பதான்'. அண்மையில் இணையத்தில் வெளியான இப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை கடந்த சில நாட்களாக சர்ச்சையைக் கிளப்பி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வருகிறார்கள்.

 

அந்த வகையில் பாஜகவை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மத்தியப்பிரதேசத்தில் பதான் படத்தை வெளியிடத் தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அயோத்தியைச் சேர்ந்த 'அனுமன்காரி' மடத்தைச் சேர்ந்த ராஜு தாஸ், பதான் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார். மத்தியப்பிரதேசத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் பதான் திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி ஷாருக்கான் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். 

 

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், காவி உடை அணிந்து பாலியலில் ஈடுபடுகிறார்கள்; அதெல்லாம் தவறில்லையா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதனிடையே ஷாருக்கான் 'பதான்' படம் எனக் குறிப்பிடாமல் சமூக வலைத்தளத்தில் வரும் எதிர்மறை விமர்சனம் குறித்து ஒரு மேடையில் பதிலடி கொடுத்திருந்தார்.   

 

இந்த சர்ச்சை தொடர்பாக பா.ஜ.க எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "காவி நிறத்தை தவறாகச் சித்தரித்துள்ள இப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது. அவர்களின் எந்தப் படத்தையும் பார்க்கக் கூடாது. அவர்களைச் சீக்கிரமே நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். அந்தக் காவி நிற உடைக் காட்சியை மாற்றவில்லை என்றால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். காவி நிறம் என்பது நம் நாட்டின் பெருமை. அது தேசியக்கொடியிலும் உள்ளது. அதனை அவமதிக்கும் முயற்சி நடந்தால், யாரையும் தப்ப விடமாட்டோம். தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடத்தப்படும்" எனப் பேசியுள்ளார் பிரக்யா சிங் தாக்கூர்.