கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர் சித்தராமையா. இவர் அம்மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் மைசூர் விமான நிலையத்தில் தனது உதவியாளரை இன்று அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரிக்கையில், சம்பந்தப்பட்ட நபர் சித்தராமையாவின் காதில் செல்போனை வைக்க முயற்சித்துள்ளார். அதாவது, சில அதிகாரிகளிடம் தனக்காக பேசுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments