Advertisment

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் தனித்து போட்டியிடும் காங்கிரஸ்...

hyjgh

Advertisment

ஆந்திராவில் எதிர்வரும் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி இன்றி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கேரள முதலமைச்சருமான உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் உம்மன் சாண்டி தற்போது தெரிவித்துள்ளார். அமராவதியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் உம்மன் சாண்டி இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.

Andhra Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe