Skip to main content

தேர்தல் அறிக்கை வெளியிடும் தேதியை அறிவித்த காங்கிரஸ் கட்சி !

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்பெற உள்ளது. இதில் முதற்கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதியும் , இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும் நடைப்பெற உள்ள நிலையில் தேசிய கட்சிகள் இது வரை தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

rahul gandhi

 

--LINKS CODE------

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை தேர்தல் அறிக்கை ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி , முன்னால் மத்திய அமைச்சர்கள் , மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர். 
 

இந்த தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் தள்ளுபடி , விவசாய கடன் தள்ளுபடி , இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு , குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயித்தல் , ஏழை , எளிய மக்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்தல், தொழில்முனைவோர்களுக்கு சலுகைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
 

முன்னதாக, நாட்டின் 5 கோடி ஏழைக் குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க, ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதி திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

 

(பி.சந்தோஷ் சேலம்)

 


 

சார்ந்த செய்திகள்