Skip to main content

குஜராத் கலவரத்துக்கு ஒப்புதல் வாக்குமூலமா? - அதிர்வலையை ஏற்படுத்திய அமித்ஷா பேச்சு

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 
 
- தெ.சு.கவுதமன்

 

A confession for Gujarat riots? Amit Shah's speech that caused a sensation!

 

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அங்கே மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து அங்கே முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், குஜராத்திலுள்ள கேடா மாவட்டத்தின் மஹுதாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய அமித்ஷா, "காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வகுப்புவாத மோதல்கள் நிறைய நடந்து வந்தன. அப்படியான மோதல்களுக்கு வகுப்புவாத சக்திகளுக்கு 2002-ல் சரியான பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் குஜராத் 22 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது" என்று பேசினார்.

 

அவரது பேச்சுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்ததோடு, "நீங்கள் 2002-ல் கற்றுக்கொடுத்த பாடம் என்ன தெரியுமா? பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பில்கிஸ் பானோவின் 3 வயதுக் குழந்தை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜாப்ரியை படுகொலை செய்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதே. நீங்கள் கற்றுக்கொடுத்த பாடத்தால்தான் டெல்லியிலும் மதக்கலவரம் நடந்ததா என்பதைத் தெரிவிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

 

A confession for Gujarat riots? Amit Shah's speech that caused a sensation!

 

குஜராத் கலவரத்தின் மூலமாக ஏற்பட்ட மதப் பிளவுதான் அங்கே பா.ஜ.க. வலுவாகக் காலூன்ற உதவியாக இருந்தது. எனினும், அமித்ஷா, மோடி மீது இதுதொடர்பாகக் குற்றச்சாட்டுகள் இருந்ததால் கலவரத்தை ஆதரித்து அவர்கள் பேசுவது கிடையாது. ஆனால் சமீபத்தில்தான் அந்த கலவர வழக்குகளில் மோடி, அமித்ஷா ஆகியோர் குற்றமற்றவர்களென்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதையடுத்து தற்போது கலவரத்தை ஆதரித்துப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. குஜராத் கலவரங்களின் கொடூரம் குறித்து மீள் பார்வை பார்த்தால்தான் அதன் வலியை நம்மால் உணர முடியும்.

 

2002-ம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அயோத்திக்குச் சென்றுவிட்டு அகமதாபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலில் கரசேவகர்கள் பயணம் செய்தனர். அந்த விரைவு வண்டி கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 70 பேர் அதில் சிக்கிப் பலியானார்கள். அதன் எதிரொலியாக, குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக நிகழ்ந்த வன்முறை வெறியாட்டத்தில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என 2000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள்.

 

சர்தார்புரா கிராமத்தில் ஒரே வீட்டிலிருந்த 33 முஸ்லிம்கள் எரித்து படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாமியர்கள் பெருமளவு குடியிருந்த குல்பர்கா குடியிருப்பினுள் கலவரக்காரர்கள் நுழைந்து பல வீடுகளைத் தீவைத்து எரித்ததில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்பட 69 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பெஸ்ட் பேக்கரிக்கு தீவைத்ததில் அங்கே பணியாற்றியவர்கள் உட்பட 14 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுபோன்ற துயரச் சம்பவங்களைப் பெரிய பட்டியலிடலாம்.

 

A confession for Gujarat riots? Amit Shah's speech that caused a sensation!

 

ராதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்மணி, அவரது மூன்றரை வயது மகள் சலேஹா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் மீது வன்முறையாளர்கள் கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் என்னவானார்களென்றே தெரியவில்லை. பில்கிஸ் பானோ, அவரது தாயார் மற்றும் மூன்று பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களைக் கொடூரமாகக் கொன்றனர். பில்கிஸ் பானோ மயக்கமடைந்ததால் அவரையும் அவரது குழந்தையையும் மட்டும் விட்டுவிட்டுச் சென்றனர். இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கால் பல்வேறு அச்சுறுத்தல்கள், இடைஞ்சல்கள் செய்யப்பட்டன. அனைத்தையும் மீறி தனது குற்றச்சாட்டுகளை நிரூபித்து 11 பேருக்கு தண்டனை கிடைக்கச் செய்தார். அந்த குற்றவாளிகளைத்தான் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதியளித்ததாகக் கூறி குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது. இவற்றைத்தான் அசாதுதீன் ஓவைசி அமித்ஷாவுக்கு பதிலடியாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒன்றிய அமைச்சராக இருப்பவர் மதரீதியாக பிரிவினை மனநிலையோடு பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருப்பதை காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.