உத்தரப்பிரதேசத்தில் மேஹாபா மாவட்டம் பாக்ரதா எனும் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் திருமணம் ஆன ஒரே வருடத்தில் கணவர் விவாகரத்து கேட்பதாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன் கணவர் தான் சுட்ட ரொட்டி(சப்பாத்தி ) கருகியதால் தன்னிடம் விவாகரத்து கேட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஏற்கனவே இஸ்லாம் சமூகத்தைசேர்ந்த ஆண் தனது மனைவியிடம் மூன்று முறை தலாக் எனக்கூறி விவாகரத்து வாங்கக்கூடிய முறையான முத்தலாக் முறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தடைவித்ததோடு அதற்கான தடை நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் சார்பில் முத்தலாக் முறை தடைசெய்யப்படுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் இதுபோன்ற விவகாரத்து முறைகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
Show comments