Compulsory retirement of 19 senior officers ... Shock in the railway sector

Advertisment

ரயில்வே துறையில் பணியாற்றி வந்த 19 மூத்த அதிகாரிகளுக்கு ஒரே நாளில் கட்டாயப் பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

திறமையின்மை, நேர்மையின்மை காரணமாக கட்டாய பணி ஓய்வு அளிக்கும் விதியை பயன்படுத்தி இணைச்செயலாளர் நிலையில் உள்ள 10 அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய பொறுப்புகளில் உள்ள 19 அதிகாரிகள் ஒரே நாளில் கட்டாய ஓய்வு பெறுவது என்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு இதே உத்தியைப் பயன்படுத்தி 32 அதிகாரிகளுக்கு கட்டாயபணி ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால் ஒரே நாளில் இவ்வளவு அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.