Skip to main content

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த கம்பவுண்டர்; பெண்ணுக்கு நிகழ்ந்த கோரம்...

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

 

xjtgx

 

ராஜஸ்தான் மாநிலம் ராம்கார் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பெண்ணுக்கு அங்குள்ள கம்பவுண்டரே பிரசவம் பார்த்த பொழுது அந்த குழந்தை கோரமாக இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராம்கார் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட மருத்துவர் யாரும் பணியில் இல்லாததால் அங்குள்ள கம்பவுண்டரே பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை வெளியே வர திணறிக்கொண்டிருந்த பொழுது அவர் அந்த குழந்தையை கவனக்குறைவாக வெளியே இழுத்துள்ளார். இதில் அந்த குழந்தையின் உடல் மட்டும் அவர் கையில் வந்துவிட, தலை தனியாக துண்டிக்கப்பட்டு பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. சம்பவம் நிகழ்ந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாத அந்த கம்பவுண்டர் நஞ்சுக்கொடியை கூட அகற்றாமல் துண்டிக்கப்பட்ட உடலை மட்டும் பிணவறையில் வைத்துள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு குழந்தைபிறப்பது கடினம் என உறவினர்களிடம் கூறி ஜெய்சால்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல கூறியிருக்கிறார். பிரச்னை பெரிதாகவே அதன்பிறகு அங்கு வந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் வயிற்றில் இருந்த தலையை நீக்கினர். இதனையடுத்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அடுத்தடுத்து விலகும் பா.ஜ.க எம்.பி.க்கள்; சூடுபிடிக்கும் தேர்தல் களம்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rajasthan BJP MP resigning and joined congress

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரிஜேந்திர சிங் ஆவார். இவர் நேற்று (10.03.2024) பா.ஜ.க.வில் இருந்து விலகினார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், சுரு தொகுதி பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாகவும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “என் குடும்ப உறுப்பினர்களே, உங்கள் அனைவரின் உணர்வுகளுக்கு இணங்க, பொது வாழ்வில் ஒரு பெரிய முடிவை எடுக்க உள்ளேன். அரசியல் காரணங்களுக்காக இந்த தருணத்தில் பா.ஜ.க முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இன்று ராஜினாமா செய்கிறேன்.

மக்களவை உறுப்பினராக 10 ஆண்டுகள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எப்போதும் மதிப்புமிக்க ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஆசீர்வாதங்களையும் அளித்த எனது சுரு மக்களவை குடும்பத்திற்கு சிறப்பு நன்றி” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ராகுல் கஸ்வான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் இன்று (11-03-24) காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தொடர்ந்து பா.ஜ.க எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.