Skip to main content

ஆளுநர் மீது காவல் நிலையங்களில் அடுத்தடுத்து கொடுக்கப்படும் புகார்கள்! செய்வதறியாது திகைக்கும் காவல் அதிகாரிகள்!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

புதுச்சேரி சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு ஆய்வுகள் என்ற பெயரில் ஆளுநர் கிரண்பேடி சட்டத்திற்கு புறம்பான வகையில் அங்குள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் சிறுவர்களின் புகைப்படங்களை சமுக வளையத்தளத்தில் பதிவிட்டு அந்த மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் மன உளைச்சல் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதாக கிரண்பேடி மீது அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

complaints at police stations over Kiranpedi!


இதுகுறித்து அவ்வமைப்பின் நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் தலைமையில், பொதுச்செயலாளர் முருகன், அதனுடன் இந்திய தேசிய இளைஞர் முன்னணி(INYF) தலைவர் கலைப்பிரியன் பொதுச்செயலாளர் தாமரை கண்ணன், நகர தலித் பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ்,மற்றும் செல்வகுமார், புதுச்சேரி மக்கள் நலவாழ்வு நற்பணி இயக்க தலைவர் ராஜா அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

 

complaints at police stations over Kiranpedi!


கடந்த மாதம் 06.11.2019 அன்று மாணவர் கூட்டமைப்பிற்கு  புகார் கடிதம் ஒன்று வந்தது. அந்த புகார் கடிதம் பெயர் ஆதாரம் எதுவும் குறிப்பிடாமல் தனது மகன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படிப்பதாகவும், அந்த தகவல் தன் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாதெனவும் குடும்பச் சூழ்நிலை காரணமாக மூன்று வேலை உணவோடு தனது மகன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நல்ல கல்வி அடைவதை விரும்பி தன் மகனை  சிறுவர் சீர்திருத்த பள்ளியில் படிக்க வைத்து வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது.

இந்த பள்ளியை ஆய்வு என்ற பெயரில் சென்ற ஆளுநர் கிரண்பேடி  அந்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களோடு புகைப்படம் எடுத்து அதனை கிரண்பேடி என்ற தனி நபர் ட்விட்டர் போன்ற இணைய தளங்களில் பதிவிட்டதனால் தன் மகன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தங்கி படிப்பது தனது வாழும் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்ததாக புகார் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

 

complaints at police stations over Kiranpedi!


இந்த குற்றச்சாட்டுகள் உண்மையானைவையா? என்பதை ஆராய ஆளுநர் கிரண்பேடி ட்விட்டர் பக்கத்தினுள் சென்று பார்த்தபோது ஆளுநர் கிரண்பேடி  ஆய்வு மேற்கண்ட போது சிறுவர்களோடு எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் 21 / 22.01.2018 தேதியில் பதிவிட்டுள்ளார். மேலும்  சிறுவர் சீர்திருத்த பள்ளி ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் கிரண்பேடி தனக்கு பாதுகாவலர்களாக உள்ள பாதுகாப்பு அதிகாரிகளை சீருடையோடு சீர்திருத்த பள்ளி வளாகத்திற்குள்  அழைத்து சென்றுள்ளார். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பயிலும் மாணவர்களை இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி எவ்வாறு கையாள வேண்டும் என்ற பல்வேறு விதிமுறைகள் இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆளுநர் கிரண்பேடி  காவல்துறையின் உயரிய பொறுப்பில் பதவி வகித்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருந்தும் கூட சிறுவர் சீர்திருத்த பள்ளி மாணவர்களோடு  எடுத்த புகைப்படங்களை பொது தளத்தில் வெளியிட்டது மட்டுமல்லாமல் நாளிதழ் செய்தி ஊடகங்களுக்கும் அளித்துள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பயிலும் மாணவர்களை புகைப்படம் எடுக்கவோ, அந்த புகைப்படத்தை வெளியிடவோ  அல்லது Juvenile  அவர்களின் அடையாங்களை வெளியிட The Juvenile Justice (care and protection of Children) Act, 2015-யின்படி தடை உள்ளது. அவ்வாறு தடையை மீறி வெளியிட்டால் அது தண்டணைக்குறிய குற்றமாகும் என்று  சட்டத்தில் உள்ளது. மேலும் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு அலுவல் மூலமாக பெற்ற தகவல்களை, அவரின் தனிப்பட்ட சமூக ஊடகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிட்டது அரசின் தகவல்களை விதிமுறைகளுக்கு எதிராக அத்து மீறியதாகும். இருந்தபோதும் ஆளுநர் கிரண்பேடி, சம்பந்தப்பட்ட துறையிடம்  உரிய அனுமதி ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய கடந்த 08.11.2019 அன்று தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவ்வாறு புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதா  என தகவலை அறிந்தபோது கடந்த 5 ஆண்டுகளில் அவ்வாறு அனுமதி கோரி சமூக நலத்துறையில்  எவரும் விண்ணப்பிக்க வில்லை என்ற தகவலை தந்துள்ளனர்.

சமீபத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் அரசு அதிகாரத்தில் உள்ள நபர்கள் பொதுதளத்தில் இதுபோன்ற தகவல்களை தெரிவிக்க கூடாது என நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அவ்வாறு அரசு ஆவணங்களை பொது தளத்தில்  பதிவிட்டதற்கு எதிராக பெரியக்கடை காவல்நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மீது புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வழக்கு கொடுக்கப்பட்டது,

ஆனால் எந்த ஒரு விசாரணையும்  நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில். ஒரு பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தையின் தாய் தனது குடும்பம் பாதிக்கப்பட்டதை  கடிதமாக எழுதியுள்ளது வேதனையளிப்பதோடு, மேலும் இதனால்  படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நற்சான்றிதழ் தொடர்பான எதிர்காலமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே ஆளுநர் கிரண்பேடி மீது வழக்கு பதிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

 

complaints at police stations over Kiranpedi!


இதேபோல் கடந்த 15/12/2019 அன்று கார்நாடக மாநிலம்,கல்லட்கா நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் ஸ்ரீ ராம் வித்ய கேந்திர பள்ளியில் நடைபெற ஆண்டு விழாவில்1992-ஆம் ஆண்டு சட்ட விரோதமாக  இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிகழ்வை 4000 மாணவர்கள் மத்தியில் மீள்உ௫வாக்கம் செய்து காட்டப்ப்படுள்ளது என்றும், அந்த நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி  கலந்துகொண்டு அந்நிகழ்வை ஊக்குவித்து மாணவர்களின் இடையே மத நல்லிணக்கத்தை  சீர் குலைக்கும் விதத்தில் செயல்பட்டதால் கிரண்பேடி மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி  மனித நேய மக்கள் கட்சி  சார்பில் பெரிய கடை காவல் நிலையத்திலும், இந்திய தேசிய இளைஞர் முன்னணி சார்பில் கோரிமேடு காவல் நிலையத்திலும்  புகார்கள்  கொடுக்கபட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதுச்சேரி மாநிலத்திற்கு அவமானத்தையும்,  நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் கவர்னர் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும். மத்திய அரசு கிரண்பேடியை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும். புதுவை அரசும் கவர்னர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.