Skip to main content

காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்றார் பி.வி.சிந்து 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

PV Sindhu

 

காமன்வெல்த் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றார்.

 

22ஆவது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்கள் வென்றுள்ளது. 

 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பி.வி. சிந்து தங்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியா வென்ற தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டனில் ஒரேநாளில் மூன்று தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

Commonwealth Games: Indian players won three golds in one day in Badminton!

 

காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21- 15, 21- 13 ஆகிய நேர் செட்களில் வென்றார். காமன்வெல்த் போட்டியின் தனிப்பிரிவில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று பி.வி.சிந்து அசத்தியுள்ளார். 

 

அதேபோல், காமன்வெல்த் பேட்மிண்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் மலேசியாவின் சீ யாங்கை 19- 21, 21- 9, 21- 16என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

 

இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் சிராக் ஷெட்டி, சாய்ராஜ் சாத்விக் இந்திய இணை, இங்கிலாந்தின் பென், ஷான் இணையை வீழ்த்தி தங்கம் வென்றது. காமன்வெல்த் பேட்மிண்டனில் ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். 

Commonwealth Games: Indian players won three golds in one day in Badminton!

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரத் கமல், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்ஃபோர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். 

 

22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

 

Next Story

100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர்!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

PV SINDHU KANGANA RANAUT

 

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை வழங்கும் விழா, டெல்லியில் இன்று (08.11.2021) நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

 

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பாடகி சித்ரா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் நட்சத்திரம் பி.வி. சிந்துவிற்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா, இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், நடிகை கங்கனா ரணாவத், சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்பாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் 119 பத்ம விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.