Skip to main content

வர்த்தக ரீதியாக பறந்த இந்தியாவில் தயாரான விமானம்! (படங்கள்)

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாக்டிக்ஸ் நிறுவனம், முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக உருவாக்கி இருக்கும் விமானம் வர்த்தக ரீதியான பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது. 

 

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் முதன்முதலாக பயணிகள் விமான போக்குவரத்து சேவையை இன்று (12/04/2022) தொடங்கியது. இந்தியாவில் போயிங், ஏர்பஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விமானங்களைக் கொண்டு தான் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 

 

இந்த டோர்னியர்- 228 ரக விமான சேவை அசாமின் திப்ரூகரில் இருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் பாசிகாட்டுக்கு இயக்கப்பட்டது. இந்த விமானம் 17 சிறு இருக்கைகளைக் கொண்டது. இந்த விமானத்தை அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்கி வருகிறது. மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் விமானம் இயக்கப்பட்டது. 

 

விமான சேவையை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் தொடங்கி வைத்து, அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.  

 

டோர்னியர் ரக விமானத்தை பாதுகாப்பு படையினர் ஏற்கனவே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச அளவில் எட்டாவது இடத்தில் சென்னை விமான நிலையம்

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

Chennai Airport ranks eighth internationally!

 

2021-ஆம் ஆண்டு நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்களில் சர்வதேச அளவில் சென்னை விமான நிலையம் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

 

கரோனா தொற்று விமான போக்குவரத்துத்துறையை உலகளவில் சென்ற ஆண்டு முடங்க வைத்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு தொற்று பாதிப்பு காரணமாக, 36% விமானங்கள் உலகளவில் ரத்து செய்யப்பட்டன. 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விமான போக்குவரத்துத்துறை சற்று ஏற்றம் காண ஆரம்பித்தது. அடுத்த அலைக்கான அச்சுறுத்தல் இருந்தபோதிலும், 2021-ஆம் ஆண்டில் 2 கோடியே 50 லட்சம் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 10% அதிகமாகும். 

 

வீழ்ச்சியடைந்துள்ள விமானத்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு வருடமாக விமான தரவு இணைய நிறுவனமான சிரியம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. விமானப் போக்குவரத்தில் காலதாமதம், விமான நிலையங்களின் செயல்பாடு, விமானத்திற்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு, உலகளவில் தரவு கணக்கெடுப்பு நடத்தியது. 

 

அதில், 'காலம் தவறாது' என்னும் பிரிவில் சென்னை விமான நிலையம் தேர்வாகியுள்ளது. சென்னை விமான நிலையம் உலக அளவில் எட்டாவது 'நேரம் தவறாது' விமான நிலையமாக, விமான தரவு இணைய நிறுவனமான சிரியத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் 89.32% சரியான நேரத்தில் புறப்படுவதாகவும், வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் இட்டாமி விமான நிலையம் 96.51%பெற்று முதலிடத்தில் உள்ளது. 

 

முதல் நான்கு இடங்களில் ஜப்பான் நாட்டில் உள்ள விமான நிலையங்கள் இருக்கும் நிலையில், ஐந்தாவது இடத்தில் ரஷ்யாவின் ஷெரெமெட்டியோ விமான நிலையம் உள்ளது. உலக அளவில் பெரிய விமான நிலையங்கள் என்ற பட்டியலில் முதல் 30 இடத்தில் இந்தியாவில் சென்னை விமான நிலையம் மட்டுமே உள்ளது. 

 

 

Next Story

சென்னையில் கனமழை: 8 விமானங்கள் ரத்து!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

Heavy rains in Chennai: 8 flights canceled!

 

கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகைக்கான 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை முழுமையாக தெரியாத காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன் ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் விமானங்களும், இங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Heavy rains in Chennai: 8 flights canceled!

கனமழை தொடரும் பட்சத்தில் மேலும் பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகின்றன.