Skip to main content

நகைச்சுவை நடிகர் டூ பஞ்சாப்பின் முதல்வர்... யார் இந்த பகவந்த் மான்!.

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

 Comedian to Punjab Chief Minister ... Who is this Bhagwant Maan !.

 

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றிபெற்றது.

 

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்க இருக்கிறார். சாதாரண நகைச்சுவை நடிகராக தனது வாழ்வைத் துவங்கிய அவர் பஞ்சாப் முதல்வர் எனும் உயரிய பொறுப்பை அடைந்துள்ளார். பகவந்த் மான் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் சைட்டோஜ் என்ற கிராமத்தில் பிறந்தார். அரசியல்வாதி என்பதை விட நகைச்சுவை நடிகர் என்ற விதத்திலேயே மக்களுக்குப் பரிச்சயமானவர். கல்லூரி காலங்களில் தன்னை stand-up காமெடியன் என  உயர்த்திக் கொண்ட பகவந்த் மான் அரசியல் நையாண்டியாய்  நகைச்சுவைகளைச் செய்து வந்தார். குறிப்பாக அவரது கல்லூரி காலங்களில் பஞ்சாபில் நிலவும் தேசிய அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாக மாற்றி மக்கள் முன் நடித்துக்காட்டி கைதட்டல்கள் வாங்கி வந்தார். இதனால் அவருக்குத் திரைப்பட வாய்ப்புகளும் கிட்டியது.

 

 Comedian to Punjab Chief Minister ... Who is this Bhagwant Maan !.

 

நகைச்சுவை நடிகராக வலம்வந்த பகவந்த் மானின் சிந்தனைகள் காலப்போக்கில் அரசியல் பக்கம் திரும்பியது. கடந்த 2011ல் மன்பிரீத் சிங் பாதல் தலைமையில் 'பஞ்சாப் மக்கள் கட்சி' எனும் அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரசியலில் காலெடுத்து வைத்ததால் நடிகர் என்ற பட்டத்தை முழுமையாகத் துறந்து முழுநேர அரசியல்வாதியாக உருவெடுத்தார். 2012ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு கிடைத்தது என்னவோ தோல்வி தான். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த உடனேயே அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. 2014 சொந்த தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் 2019 ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வென்றார். இதனால் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தற்பொழுது துரி சட்டமன்றத் தொகுதியில் வென்றுள்ளார். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பஞ்சாப் முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் பகவந்த் மான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.