Skip to main content

ஆற்றில் கட்டி வீசப்பட்ட கல்லூரி மாணவன்... பள்ளி சிறுமியின் தந்தை பரபரப்பு வாக்குமூலம் 

Published on 16/10/2022 | Edited on 16/10/2022

 

A college student who was thrown into the river... sensational confession of the school girl's father

 

கர்நாடக மாநிலம் விஜயப்புரா மாவட்டம் திகோட்டா தாலுகாவை சேர்ந்த கல்கவடாகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குரப்பா. இவரது மகள் பள்ளியில் பயின்று வந்த நிலையில் 21 வயதான மல்லு ஜகமண்டி என்ற கல்லூரி மாணவன் அச்சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவன் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகவும், மீட்டுத் தரும்படியும்  குரப்பா  போலீசில் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கல்லூரி மாணவனான மல்லு ஜகமண்டியும் குரப்பாவின் மகளான பள்ளி சிறுமியும் காதலித்து வந்த நிலையில் இதற்கு சிறுமியின் தந்தை குரப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். காதலை கைவிடும்படி மகளை பலமுறை எச்சரித்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி காதலியை தேடி வீட்டிற்கு சென்ற மல்லு ஜகமண்டி சிறுமியை சந்தித்து தனிமையில் பேசி இருந்துள்ளார். இதனைப் பார்த்த சிறுமியின் தந்தை அவரை கடுமையாக எச்சரித்தார். இதனால் மனமுடைந்த சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

 

தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து வேதனைப்பட்ட குரப்பா  மல்லுவை அழைத்து வந்து சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்துள்ளார். ஆனால் இந்த கொலையை மறைப்பதற்காக தனது மகளும், மாணவன் ஒருவரும் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தது தெரியவந்தது.

 

மேலும் சிறுமியின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரது சடலங்களையும் மூட்டையாக கட்டி கிருஷ்ணா ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பாகல்கோட்டை மாவட்டம் பீலகியில் கிருஷ்ணா ஆற்றில் மிதந்து வந்த மல்லுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பள்ளி சிறுமியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.