Advertisment

கல்லூரி சேர்க்கை; செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் முடிக்க ஆணை!

COLLEGE ADMISSION University Grants Commission INSTRUCTION

நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை வரும் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (University Grants Commission-'UGC') தெரிவித்துள்ளது.

Advertisment

கரோனா இரண்டாவது அலை காரணமாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், புதிய வழிகாட்டுமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதில், "அனைத்து மாநிலங்கள், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டப் பிறகே முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் தொடங்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 1- ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால், அக்டோபர் 18- ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள், தேர்வுகள், விடுமுறைகள் உள்ளிட்டவற்றை அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூலை 31- ஆம் தேதிக்குள் திட்டமிட வேண்டும். இறுதி பருவத் தேர்வுகளை ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை ரத்துச் செய்யப்பட்டாலோ, மாணவர்கள் வேறு இடங்களுக்கு சென்றாலோ, முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

all universities colleges students ugc
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe