Advertisment

கல்லூரி மாணவியை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய சக நண்பர்கள் கைது..!

df

கல்லூரி மாணவியை அவரது சகநண்பர்களே கற்பழிப்பு செய்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடாவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இதே மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பி.டெக் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் அதே கல்லூரியில் படிக்கும் வம்சி கிருஷ்ணா, சிவா என்ற மாணவர்கள் நெருக்கமாக பழகி வந்தனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில், கடந்தாண்டு பிப்ரவரியில் வம்சி கிருஷ்ணா தனது பிறந்தநாளுக்காக பார்ட்டி தருவதாக கூறி இளம்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்தார். அங்கு வந்த இளம்பெண்ணுக்கு இரு நண்பர்களும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயங்கியதும் இருவரும் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டினர்.

கடந்த வாரம் வம்சி கிருஷ்ணாவும், சிவாவும் பலாத்கார வீடியோவில் பதிவான தங்கள் முகங்களை மறைத்துவிட்டு அதை தனது நண்பர் பிரவீனின் செல்போனுக்கு அனுப்பினர். பின்னர், பிரவீன் அந்த பெண்ணுக்கு போன் செய்து ரூ.10 லட்சம் தராவிட்டால் பலாத்கார வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் அக்ரிபல்லி காவல் நியைத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன், சிவா, வம்சிகிருஷ்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gang raped
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe