Skip to main content

54 பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள், 7 பட்டியலின அர்ச்சகர்கள்...

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
devasam


கேரளாவில் கடந்த ஆண்டு முதன் முறையாக பிராணர் அல்லாத பூசாரிகள் கோவில்களில் பூஜைகள் மேற்கொள்ள நியமிக்கப்பட்டனர். இதில் சுமார் 36 பிராமணர் அல்லாத பூசாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனை அடுத்து மேலும் பலர் இவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், பிராமணர் அல்லாத  7 பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்பட பிராமணர்கள் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அர்ச்சகர்களாக கொச்சி தேவசம் போர்டு நியமித்துள்ளது. தேவசம் போர்டு தேர்வாணைய குழு, இவர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகிய தேர்வுகள் வைத்து நியமித்துள்ளது. இதில் 31 பேர் தகுதி அடிப்படையில் தேர்வாகியுள்ளனர். நியமிக்கப்பட்ட 70 அர்ச்சகர்களில் 54 பேர் பிராமணர் அல்லாதவர்கள். கேரளாவிலுள்ள அனைத்து கோவில்களும் தேவசம் போர்டு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

விமானநிலையத்தில் 'பாம்' என உச்சரித்த முதியவர் கைது!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

cochin international airport old man incident police

 

'பாம்' என்ற வார்த்தையைச் சொன்ன முதியவர் கைது செய்யப்பட்டார். 

 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 63 வயதான மம்மன் ஜோசப் என்ற முதியவர் தனது மனைவியுடன் ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் மகளைப் பார்க்க செல்வதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் கொண்டு வந்த உடைமைகளை விமான நிலையத்தின் அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த அந்த முதியவர், தனது உடைமைகளில் 'பாம்' இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

 

உடனடியாக, அந்த முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவரின் உடைமைகளை முழுவதுமாகப் பரிசோதித்து வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து, அந்த முதியவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

 

 

Next Story

சபரிமலையில் இன்று முதல் 5,000 பக்தர்களுக்கு அனுமதி!

Published on 20/12/2020 | Edited on 20/12/2020

 

sabarimala temples peoples devaswom board

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள மாநில அரசின் முடிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

 

அதன்படி, சபரிமலையில் இன்று முதல் 5,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு 48 மணி நேரம் முன்பு பெற்ற ஆர்.டி-பி.சி.ஆர். கரோனா பரிசோதனை முடிவின் சான்றை அளிப்பதை உயர்நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது. https://sabarimalaonline.org/ என்ற இணையதளத்தில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.