Skip to main content

"கனவுல கூட நினைத்துப் பாக்கல!" - பஞ்சாயத்துத் தலைவரான தூய்மைப் பணியாளர் உருக்கம்!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

The cleaner woman became the leader of the kerala panchayat election...

 

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடது சாரிகளின் கூட்டணியான 'எல்.டி.எஃப்.' பல அதியங்களை நிகழ்த்திவருகிறது.

 

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள, பத்னாபுரம் ப்ளாக் பஞ்சாயத்து டிவிஷன் ஆபீஸ் என்று சொல்லப்படுகிற ஊராட்சி அலுவலகத்தில், கடந்த பத்து வருடமாகத் துப்புரவு வேலை செய்துவருபவர் ஆனந்தவல்லி என்கிற நடுத்தர வயதுப் பெண்.

 

அடிப்படையில் பட்டியலினச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணான ஆனந்தவல்லி, அந்த ப்ளாக் அலுவலத்தில் தினக்கூலி அடிப்படையில் காலை, மாலை கூட்டிப் பெருக்கி துப்புரவுசெய்து, பின்பு அங்குள்ள வீடுகளிலும் பாத்திரங்கள் துலக்கிப் பிழைப்பு நடத்திவந்துள்ளார். கணவர் மோகனன் சி.பி.எம்.-ன் ஊராட்சிச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். பெயிண்ட்டிங் வேலையும் செய்துவருகிறார்.

 

ஆரம்பக் கல்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஆனந்தவல்லியை சி.பி.எம். இம்முறை பத்னாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் தனது கேண்டிடேட்டாக நிறுத்தியது. மேல்தட்டு நடுத்தர வர்க்கம் என்று கலவையான ஜனத்தொகையைக் கொண்ட அந்தப் பொது வேட்பாளர்களுக்கான ஊராட்சியில், சேலஞ்சாக ஆனந்தவல்லியை சி.பி.எம். களமிறக்க, இதனை மிகச் சாதாரனமாக எடுத்துக் கொண்டனர் எதிர் வேட்பாளர்களான காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேட்சைகள்.

 

நான்கு முனைப் போட்டியில் கொதிநிலையில் களமிருந்தது. இறுதியில் மற்ற வேட்பாளர்களைவிட 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் ஆனந்தவல்லி. அடுத்த அதிசயமாக எந்தப் ப்ளாக் ஆஃபீஸில் ஆனந்தவல்லி பத்துவருடமாகக் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக்கினாரோ, அதே பத்னாபுரம் ஊராட்சியில், அவரைத் தலைவராக மாற்றிவிட்டனர் இடது சாரிகள்.

 

ப்ளாக் ஆபீஸை சுத்தப்படுத்திய ஆனந்தவல்லி, தற்போது ஊராட்சியையே சுத்தப்படுத்தக் கிளம்பியிருக்கிறார். “நான் கனவில கூட இந்த மாதிரி நடக்கும்னு நினைச்சுபாக்கல. தினமும் ஆஃபீஸ்ல நடக்குறதுப் பாத்திருக்கேன். பார்ட்டி தந்த வேலய நிச்சயம் நல்லபடியாச் செய்வேன்” என்கிறார் ஆனந்தவல்லி.

 

cnc

 

21 வயது கல்லூரி மாணவியான ஆரியா ராஜேந்திரன் சி.பி.எம்.மின் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர். அடுத்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, பொதுத் தொகுதியில் நிற்கவைத்து அதன் தலைவராகவும் மாற்றியதோடு கோபுரத்தில் வைத்திருக்கிறார்கள்.

 

இந்தியாவில் எந்த மூலையிலும் துப்புரவுத் தொழிலாளி பெண் ஒருவர் அதே அலுவலகத்தின் தலைவராக மாறியதாக, வரலாறில்லை என்கிறார்கள் அக்கட்சியினர்.

 

இதனால்தான், கேரளா கடவுளின் தேசமோ...!
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.