மக்களவைக்கான நான்காம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் 125-129 வரை உள்ள பூத்களில் திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த அங்கிருந்த காவலர்கள் தடியடி நடத்தினர். இதனையடுத்தி நடந்த கலவரத்தில் சில போலீசாரும் தாக்கப்பட்டனர். மேலும் வெளியே நின்று கொண்டிருந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.