குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்பொழுது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கான நடைமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாகமத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இச்சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிட்டுள்ளது உள்துறை அமைச்சகம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இந்த சட்டமானது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.