Advertisment

இந்திய பகுதியில் குடியிருப்பை ஏற்படுத்திய சீனா - பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட்!

subramaniyan swamy

இந்திய - சீன எல்லையில்,கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில்கடந்த வருடம் இரு நாடுகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள்வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக்கூறப்பட்டது. இந்த நிலையில் சீனஇராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள்உட்படஐந்து பேர் பலியானதாக தற்போது சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கைசெய்தி வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்தியா - சீனாஇடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவினைத்தொடர்ந்து,பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டன. இதனையொட்டி இருநாடுகளுக்குமிடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று (20.02.2021) நடைபெறவுள்ளது.

Advertisment

இந்தநிலையில் பாஜகஎம்.பிசுப்பிரமணியன் சுவாமி, இந்திய பகுதியில் சீனா குடியிருப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியாவும் சீனாவும் பங்கோங் ஏரி பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதை நிறைவு செய்துள்ளதாக இன்று ஊடகங்கள் அறிவிக்கின்றன. அதாவது ஜூன் மாதத்தில், உண்மைக் கட்டுப்பாட்டுகோட்டை தாண்டி சென்றுநாம் எடுத்துக்கொண்ட பகுதிகளை இந்தியா விட்டுவிட்டது. ஆனால் சீனஇராணுவம் உண்மைக் கட்டுப்பாட்டுகோட்டைதாண்டி, நமது பக்கத்திலுள்ள டெப்சாங்கில் குடியிருப்புகளைக் கட்டியது. அதன் நிலையென்ன? அமைதி." எனதனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியபகுதியைசீனாஆக்கிரமிப்பு செய்யவில்லை எனமத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், பாஜகஎம்.பியே, சீனா இந்திய பகுதியில்குடியிருப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

border china India Subramanian Swamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe