Skip to main content

குழந்தைகளுக்கான பால் புட்டியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்!

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் புட்டிகளில், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உடைய  , தடை செய்யப்பட்ட பிஸ்பினால்-ஏ என்ற வேதிப்பொருள் பாலூட்டும் புட்டிகளில் பயன்டுத்தப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது என டாக்சிக் லிங்க் அமைப்பு கூறியுள்ளது. பிஸ்பினால்-ஏ என்பது, பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் ஒன்று. உணவு பொருட்கள் அடைத்து வைக்கப்படும் பிளாஸ்டிக் புட்டிகளில் இந்த வேதி பொருள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தயாரிக்கப்படும்  பால் புட்டிகளில் இந்த வகை வேதிப்பொருட்களை முற்றிலும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய நிர்ணய ஆணையம் 2015 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

 

 

feeding bottle

 

 

குழந்தைகளுக்கு பிஸ்பினால்-ஏ வேதிப்பொருளை கொண்டும் தயாரிக்கப்பட்ட பாட்டில்களை பயன்படுத்தி உணவூட்டும் போது , வேதிப்பொருளானது உணவில் கலந்து இருக்கும். இந்த உணவை அருந்தும் குழந்தைகளுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தான் இந்திய தர நிர்ணய ஆணையம் இந்த வகை வேதிப்பொருளுக்கு தடை விதித்துள்ளது. உலக நாடுகள் பலவும் குழந்தைக்களுக்கான உணவுப் பொருட்களை இந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்ட புட்டிகளில் அடைத்து வைப்பதை தடை செய்துள்ளது. இருப்பினும்  இந்தியாவில் இத்தகைய பிஸ்பினால்-ஏ பயன்படுத்தி பால் புட்டிகள் தயாரிக்கப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்சிக் லிங்க் அமைப்பு கூறியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.