Skip to main content

2 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி - எய்ம்ஸ் இயக்குநர்!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

aiims director

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சில நாடுகள் 12 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.

 

அதேநேரத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மீது தடுப்பூசி பரிசோதனை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, செப்டம்பர் - அக்டோபரில் 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "குழந்தைகளுக்குப் பொதுவாக லேசான பாதிப்பே இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை நாம் உருவாக்க வேண்டும். ஏனெனில் இந்த தொற்றுநோயை நாம் கட்டுப்படுத்த வேண்டுமானால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சோதனைக்கு முன்வந்துள்ளதால், பாரத் பயோடெக் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் மிக வேகமாக சோதனைகளைச் செய்கின்றன. தடுப்பூசி சோதனை முன்கூட்டியே முடிவடையும். மூன்று மாதங்களில் முடிவடையாலாம். செப்டம்பர் மாதத்திற்குள் நம்மிடம் தரவு இருக்கும். அப்போதே தடுப்பூசிக்கு ஒப்புதலும் கிடைக்கும் என நம்பலாம். எனவே செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு செலுத்தக்கூடிய தடுப்பூசிகளை நம் நாட்டிலிருந்தே பெறுவோம்" என கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.