Skip to main content

'பொன்னியின் செல்வன்' ஸ்டைலில் முதலமைச்சரின் பேனர்கள்! 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Chief Minister's birthday flex in Ponniyin Selvan style!

 

என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதுச்சேரி மாநில முதலமைச்சருமான ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி, வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஏராளமானோர் அவரது வீட்டில் குவிந்தனர். புதுச்சேரி நகர் முழுவதும் அவரின் பிறந்தநாளை, அவரது ஆதரவாளர்கள், கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 

 

பொன்னியின் செல்வன், விக்ரம், புஷ்பா திரைப்பட ஹீரோக்கள் ஸ்டைலில் முதலமைச்சர் ரங்கசாமியின் படங்களை பேனர்களாக வைத்து அசத்தியுள்ளனர். 

 

பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு சென்று வழிபட்ட முதலமைச்சர் ரங்கசாமி, அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். புதுச்சேரி மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். 

 

அதேபோல், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்  பக்கத்தில், புதுவை  முதலமைச்சர் அண்ணன்  ந.ரங்கசாமி  அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.