Skip to main content

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம்; முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Chief Minister Jagan Mohan's announcement on Visakhapatnam as the new capital of Andhra Pradesh;

 

ஆந்திரப் பிரேதசம் மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத் நகரம் இருந்தது. அதன் பின்னர், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிந்தது. இதையடுத்து, ஹைதராபாத் என்பது தெலுங்கானாவின் தலைநகராக மாறியதால் ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. இதில் அமராவதியில் தலைமைச் செயலகம், சட்டசபை அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடந்து வந்தன.

 

இதற்கிடையே, ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். அதன்படி, அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் என 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார். மேலும், அதில் அமராவதி தலைநகரில் சட்டசபை கூட்டம் நடக்கும், கர்னூல் தலைநகரில் உயர்நீதிமன்றம் செயல்படும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று கூறினார். 

 

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அதில் அவர், விரைவில் விசாகப்பட்டினம் ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக மாற உள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, ஆந்திரா மாநில அமைச்சரவைக் கூட்டம் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.. அந்த கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, 'விசாகப்பட்டினம் புதிய தலைநகராக மாற்றப்படும். மாநிலத்தில் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அறிவித்தார். மேலும், அவர் விசாகப்பட்டினம் விஜயதசமி தினமான அக்டோபர் 23 ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும்’ என்று தெரிவித்தார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத், “அக்டோபர் 23 ஆம் தேதி விஜயதசமி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பணியாற்றுவார்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை; ஆனால் ஒரு கண்டிஷன்’ - சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Chandrababu Naidu's promise Stipend for Backward People at lok sabha election campaign

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். 

இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.