Skip to main content

நான் அப்படி கேக்கவே இல்ல - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

cji bobbe

 

மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான மோஹித் சுபாஷ் சவான் என்பவர், பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீனை ரத்துசெய்தது. இதனையடுத்து, அவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபரிடம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணையே திருமணம் செய்துகொள்ளகிறாயா? எனக் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தலைமை நீதிபதி பதவிக்குக் கண்டனங்கள் குவிந்ததுடன், அவர் பதவி விலக வேண்டுமெனவும் குரல்கள் எழுந்தன.

 

இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்தச் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதிகேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்த அவர், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்கவில்லை. அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறாயா என்றுதான் கேட்டேன் எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? ; இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி..." - வழக்கறிஞர் பாலு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

க

 

சமீபத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியான தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்ற நிலையில் இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலு அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " இந்தத் தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால் ஒட்டுமொத்த இந்தியாவையும் உடைத்துக்காட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா முடிவெடுத்திருக்கின்றது. அதைத் தற்போது அவர்கள் நிறைவேற்றி உள்ளார்கள். அதை நீதிமன்றம் தற்போது வழிமொழிந்திருக்கிறது. 

 

சுதந்திரத்திற்கு முன்பாக இந்தியா 56 சமஸ்தானங்களாக, அதற்கு முன்பாக 500க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த இடத்திற்கு தற்போது அவர்கள் நம்மை எல்லாம் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள் என்பது மட்டும் நிஜம். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் பெரும்பான்மை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் பல குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்தத் தீர்ப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. இதில்  மூன்று நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர். 

 

இந்தத் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளில் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி லலித். அவரும் ரவீந்திர பட் அவர்களும் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சட்டம் தொடர்பாக அவர்களின் பார்வையே வேறாக இருக்கிறது. இதுதொடர்பாக நீதிபதிகள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்துள்ளனர். இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி என்று இந்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதுவரை இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக மொத்தமாக வைக்கப்பட்ட அநீதியின் வடிவமாக இந்தத் தீர்ப்பு இருக்கிறது. 

 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சாதிய அடிப்படையில் கொடுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டிற்கு இந்தப் பொருளாதார ரீதியிலாகக் கொடுக்கப்பட இருக்கும் இட ஒதுக்கீடு என்பது அதை அடியோடு சமாதியாக்கும் வகையில் அமைந்துள்ளது. இது படிப்படியாக இட ஒதுக்கீடு எதற்காக இந்த அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்டதோ அதன் அடிப்படை தத்துவத்தையே அசைத்துப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு நீதிபதிகளும் அந்தக் கருத்தையே வலியுறுத்திக் கூறுகிறார்கள். தங்களுடைய தீர்ப்பில் கூட அதை மிகத் தெளிவாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்ற நடைமுறையே பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற கருத்தை இருவருமே மிகவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் பயன்படுத்திய வார்த்தைகள் என்பது மிகவும் முக்கியமானது. 

 

மற்ற மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இந்தியாவில் 80 சதவீத மக்கள் பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் பலமாக இருக்கவில்லை. அப்படி இருக்கையில் உயர் சாதியினருக்கு மட்டும் இந்த இட ஒதுக்கீடு என்பது அவர்களைப் பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும். இதைத் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளும் தங்கள் தீர்ப்புகளில் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். இதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறலாம் என்ற தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். 

 

இதைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ஐயம் தீர்ப்பு வழங்கிய அந்த இரண்டு நீதிபதிகளுக்கு இருந்திருக்கிறது. தற்போது பெரும்பான்மை நீதிபதிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இதுவே தற்போது நடைமுறையில் இருக்கும். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு கூட இதை விசாரிக்க வாய்ப்பு ஏற்படும். அதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தத் தீர்ப்பு என்பது சமூகநீதியை விரும்பும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

 


 

Next Story

உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்பு 

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

t y chandrachud assumed charge as the 50th Chief Justice of the Supreme Court

 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார்.

 

உச்சநீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்று வருகிறார். இதற்கான பதவியேற்பு விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சட்டத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.

 

ஆதார் கார்டு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பங்காற்றியுள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அதுதொடர்பான வழக்குகளில் தீர்ப்பும் வழங்கியிருக்கிறார். அதேபோல், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு, தன்பாலின சேர்க்கையை அங்கீகரிப்பது உள்ளிட்ட பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது.