ADVERTISEMENT

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கரோனா!

05:02 PM Apr 20, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று கரோனா பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி சுஷில் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. சுனில் சந்திராவுடன் தொடர்பில் இருந்த தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT