Skip to main content

ஏப்ரல் 1 முதல் இந்த எட்டு வங்கிகளின் செக்புக் மற்றும் பாஸ்புக் செல்லாது

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

cheques and passbooks of 8 banks to become invalid from april 1

 

பொதுத்துறை வங்கிகள் சிலவற்றின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை ஆகஸ்ட் 2019இல் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஓரியண்டல் வங்கி (ஓபிசி) மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. அதேபோல சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இதே திட்டத்தின்படி அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடனும், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை பாங்க் ஆஃப் பரோடாவுடனும் இணைக்கப்பட்டன.

 

இந்த இணைப்பு திட்டத்தைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இணைப்புக்குள்ளான எட்டு வங்கிகளின் காசோலைகள் மற்றும் பாஸ்புக்குகள் செல்லுபடியாகாது எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் தேனா வங்கி ஆகிய வங்கிகளின் காசோலைகளை ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த எட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் மொபைல் எண், முகவரி, பெயர் போன்ற கணக்கு விவரங்களையும் இணைக்கப்பட்ட வங்கிகளிடம் புதுப்பிக்க வேண்டும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு, வாடிக்கையாளர்கள் புதிய காசோலை புத்தகம் மற்றும் பாஸ்புக் ஆகியவற்றைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காசோலை மோசடி வழக்கு; அரசுப் பள்ளி ஆசிரியைக்கு சிறைத் தண்டனை 

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

government school teacher cheque case in trichy 

 

காசோலை மோசடி வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு திருச்சி லால்குடி, வாளாடியைச் சார்ந்த சேகர் என்பவரது மனைவி சித்ரா என்பவர் 3 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை கடனாக வாங்கியிருந்தார். சித்ரா, திருச்சி லால்குடி மருதூர் பஞ்சாயத்து யூனியன் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோவிந்தராஜிடம் வாங்கிய கடன் தொகைக்காக சித்ரா கொடுத்த காசோலை சித்ராவின் வங்கியில் பணமில்லாமல் திரும்பியுள்ளது. இந்நிலையில் கோவிந்தராஜ் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் -3 திருச்சி நீதிமன்றத்தில் சித்ராவிற்கு எதிராக காசோலை மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். மேற்படி வழக்கை விசாரித்து இன்று (16.03.2023) தீர்ப்பளித்த நீதிமன்றம். சித்ராவிற்கு ஒரு மாத சிறைத் தண்டனை மற்றும் காசோலை தொகையை அபராதமாக மனுதாரருக்கு வழங்க  சித்ராவுக்கு உத்தரவிட்டு  தீர்ப்பளித்தது. 

 

 

Next Story

வங்கிக் கடன் மோசடி - குஜராத் தொழிலதிபர் கைது

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Bank Loan Fraud - Gujarat Businessman Arrested!

 

வங்கிகளில் சுமார் 3,300 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

குஜராத் மாநிலம், சூரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கப்பல் கட்டும் நிறுவனம் ABG Shipyard Limited. இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள ரிஷி கமலேஷ் அகர்வால், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட 28 வங்கிகளில் 22,842 கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு வேண்டுமென்றே, திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

 

கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் 2017- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரிஷி கமலேஸ் அகர்வாலும், அவரது கூட்டாளிகளும் குற்றச்சதி, மோசடி அரசுப் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. 

 

மேலும் வங்கிக் கடனை சில குறிப்பிட்ட, நோக்கத்திற்காக பெற்றுக் கொண்டு பிற வழிகளில் செலவு செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பான, புகாரில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

 

இவரது வங்கிக் கடன், 2016- ஆம் ஆண்டு ஜூலை 2019- ஆம் ஆண்டுக்கு இடையே வாரா கடனாக அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்ஷி போன்றோரின் வரிசையில் ரிஷி கமலேஷ் அகர்வாலும் இணைந்திருப்பது தெரிய வந்தது.