Advertisment

விதிகளை மீறவில்லை சென்னை சில்க்ஸ்; உச்சநீதிமன்றம் தீர்ப்பு

fdgsx

Advertisment

சென்னை தியாகராய நகரில் இருந்த 'சென்னை சில்க்ஸ்' நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு தீ விபத்தில் எரிந்து நாசமானது. இதனை தொடர்ந்து அதே இடத்தில புதிய கட்டிடம் கட்டும் பணிகளை சென்னை சில்க்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. அந்த புதிய கட்டிடமானது விதிமுறைகளை மீறி கட்டப்படுவதால் அதற்கு தடை விதிக்கவேண்டும் என கண்ணன் என்பவர் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் இந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த நவம்பர் 14 ஆம் தேதி உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து ஜனவரி 3 ஆம் தேதி கண்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த 5 ஆம் தேதி இந்த வழக்கை ஏற்ற நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் நடைபெற்ற விசாரணையை கொண்டு இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என கூறி 'சென்னை சில்க்ஸ்' கட்டிடம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Supreme Court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe