Advertisment

சென்னை - புனே ரயில் பயணம்; 40 பயணிகளுக்கு உடல்நலக் குறைவு

Chennai - Pune Train Travel; 40 passengers fell ill

Advertisment

சென்னை - புனே ரயிலில் பயணம் செய்த பயணிகளில் 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து புனேவுக்கு பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது ரயிலில் பயணித்த பயணிகளுக்கு ரயில்வே சார்பில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. அதன்படி ரயிலில் வழங்கப்பட்ட இரவு உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு ஒரே நேரத்தில் ஒவ்வாமை பாதிப்பு காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் 40 பேருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரயில் பூனே சென்றவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

food Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe