Advertisment

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தில்லி சாலைகளை லண்டனில் உள்ளதை போல் மாற்றுவோம் - கெஜ்ரிவால் பேச்சு!

அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த புதிய தேர்தல் வாக்குறுதி தில்லி மக்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. தில்லியில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் தேர்தலே தில்லியில் நடக்க உள்ள குறிப்பிடத்தக்கது. இதற்கான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களை அரசியல் கட்சிகள் தற்போது தொடங்கி உள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தில்லி முதல்வர் ஜெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய அவர், எங்களை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்தினால் தில்லியை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவோம் என்றார். மேலும் பேசிய அவர், எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கினால், தில்லி சாலைகளை லண்டன் டோக்கியோ சாலைகளை போன்று மாற்றுவோம் என்று தெரிவித்தார். முதல்வரின் இந்த பேச்சை எதிர்கட்சியான பாஜக தற்போது விமர்சனம் செய்துள்ளது. இந்த ஆட்சியில் ஏன் சாலைகளை அவ்வாறு மாற்றவில்லை என்றும் அவர்கள் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அந்த விவகாரம் அம்மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment
Aravind Kejriwal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe