Advertisment

அடுத்த கட்டத்தை எட்டிய சந்திரயான் - 3

Chandrayaan reached the next stage - 3

Advertisment

நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான் - 3 என்ற விண்கலம் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜுலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.

பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 இன் உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணியை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும் இடத்தில் உந்துசக்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரயானை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தி வந்தனர். அந்த வகையில் முதல், இரண்டு, மூன்று, நான்கு,ஐந்து மற்றும் ஆறு என விண்கலத்தின் உயரம் உயர்த்தும் நடவடிக்கை சிறு சிறு இடைவெளிகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது.

இந்நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திராயன் 3 விண்கலம் தற்போது சென்றுள்ளது. நிலவின் ஈர்ப்பு விசைக்குள் இருப்பதாக இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவிற்குள் சந்திராயன் 3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் ஈர்ப்பு விசை பகுதிக்குச் சென்றவுடன் சந்திரயான் - 3ன் உயரமானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கப்படும். இஸ்ரோ திட்டத்தின் படி சந்திரயான் - 3 நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்தால் நிலவின் தென் பகுதியில் ஆய்வு நடத்திய முதல் நாடு என்ற பெயர் இந்தியா பெறும் என்ற சூழலில், சந்திரயான் - 3ன் ஒவ்வொரு வெற்றிப்படியும் உலக விஞ்ஞானிகளை உற்று நோக்க வைத்துள்ளது.

moon ISRO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe