Skip to main content

சந்திரயான் - 3; கவுண்ட் டவுன் இன்று தொடக்கம்

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Chandrayaan-3 countdown begins today

 

நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலம் ஏவப்பட இருக்கிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

 

இதற்கு முன்பாகவே 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 நிலவில் இறங்கும்போது அதன் ரோவர் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில் சந்திரயான்-3 என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த விண்கலமாகப் பார்க்கப்படுகிறது.  சந்திரயான்-3 விண்கலம் நாளை  பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்து இருந்தது.

 

இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்திற்கான  கவுண்ட் டவுன் இன்று தொடங்கப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் எம்கே 3   (LVM MK 3) என்ற ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான கவுண்ட் டவுன் 26 மணி நேரம் இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்