Skip to main content

சந்திரயான் 2 நிகழ்த்திய அரிய கண்டுபிடிப்பு... இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி...

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' தரையிறங்கும் நிகழ்வின்போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.

 

chandrayaan 2 found argon 40 in moon

 

 

பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேகமாக சென்று லேண்டர் நிலவின் தரையில் மோதியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். விக்ரம் லேண்டர் தரையிறக்கம் தோல்வியடைந்தாலும், நிலவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆர்பிட்டர் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டது.

இந்த நிலையில், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயுவின் மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டரில் உள்ள சேஸ் 2 என்ற கருவி ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக் கூடிய இந்த வாயு பூமியில் மிக அரிதாகவே காணப்படும் ஒன்றாகும். தற்போது இந்த வாயு நிலவின் புறக்காற்று மண்டலத்தில் இருப்பதை ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Announcement of August 23 as National Space Day

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட்  23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்த சாதனை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியையும் குறிக்கும். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தைப் பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். அதேபோல லேண்டர் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதி தினம் தேசிய விண்வெளி தினமாகவும் கொண்டாடப்பட இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாகத் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

நாசாவுக்கு முன்னரே விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இஸ்ரோ... சிவன் வெளியிட்ட தகவல்...

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய விக்ரம் லேண்டர் பாகங்களையும், விழுந்த இடத்தையும் கண்டுபிடித்ததாக நாசா நேற்று தெரிவித்திருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதமே விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

 

sivan claims isro found vikram lander in september

 

 

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திராயன்- 2 விண்கலத்தை GSLV மார்க் 3 ராக்கெட் மூலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ. ஆனால் எதிர்பாராத விதமாக நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கும்  இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது.

இந்நிலையில் தமிழக பொறியாளர் ஒருவரின் ஆய்வின் அடிப்படையில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதி கண்டறியப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்தது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி சந்திரயான்-2ன் ஆர்பிட்டரை கொண்டு முன்பே கண்டுபிடித்துவிட்டோம்.  ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் இன்னும் ஏற்படவில்லை.  விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பட்ட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என கடந்த செப்டம்பர் 9ந்தேதியே இஸ்ரோ தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டு உள்ளது.  இதனை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.