Skip to main content

“மோடி விபத்து என்றால் இவர் பெரும் விபத்து..”- சந்திரபாபு நாயுடு ஆவேசம்

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

மக்களவை தேர்தலுக்கான மனு தாக்கல் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்தியா முழுவதும் தேர்தல் களம் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. 
 

chandrababu

 

--LINKS CODE------

இந்நிலையில் அமராவதியில் நேற்று தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெலிகான்பரன்ஸ் மூலம் பேசுகையில், “ஜனநாயகத்தை மோடியும், அமித்ஷாவும் சீரழிக்க முடிவு செய்துள்ளனர். தற்போது தேர்தல் ஆணையத்தையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. சில அமைப்புகளின் பின்னால் பாஜக நின்றுகொண்டு  மதங்களிடையே பிரச்சினையை உண்டாக்கி வருகிறது. 
 

இவர்களின் அராஜகத்தை ஒடுக்க வேண்டும் அதற்கு அனைத்துவிதமான மக்களும் ஒன்றாக சேர வேண்டும். நாட்டுக்கு மோடி ஒரு விபத்தை போன்றவரென்றால், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு பெரும் விபத்தை போன்றவர்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்