Advertisment

“ரூ.500 நோட்டுக்களை திரும்பப் பெற வேண்டும்” - மத்திய அரசிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

Chandrababu Naidu's request to the Central Government to Revoke Rs. 500 notes

ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment

ஆந்திரப் பிரதேச மாநிலம், ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றிய சந்திரபாபு நாயுடு, “டிஜிட்டல் நாணய அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் கொடுத்தபோது, ​​நான் அவரிடம் ஒரே ஒரு கோரிக்கை வைத்தேன். ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்துங்கள் எனச் சொன்னேன். டிஜிட்டல் நாணயத்தை செயல்படுத்தி ஊக்குவிக்க வேண்டும், பின்னர், ஏதேனும் ஊழல் நடந்தால், அதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என நான் அவருக்கு பரிந்துரைத்தேன். இத்தகைய நடவடிக்கையால், ஊழலைக் கட்டுப்படுத்தவும் நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும்.

Advertisment

இந்த பரிந்துரையின் பேரில் மத்திய அரசு செயல்பட வேண்டும். இன்று இந்த சபையிலிருந்து நான் மீண்டும் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன், இன்று டிஜிட்டல் நாணய உலகம். கட்சி நடவடிக்கைகளுக்கு யாராவது நன்கொடை அளிக்க வேண்டியிருந்தால், நாம் ஒரு பட்டியலைப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ஒரு கியூ.ஆர் (QR) குறியீட்டின் மூலம், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைகளை அணுகலாம். ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை விநியோகிக்க வேண்டிய அவசியமில்லை” என்று அவர் கூறினார்.

rs 500 Chandrababu Naidu Andhra Pradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe