corona vaccine

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் முழு பயன்பாட்டில் உள்ளன. கோவிஷீல்ட்தடுப்பூசியை சீரம் நிறுவனமும், கோவாக்சின் தடுப்பூசியைபாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்துவருகின்றன. இந்த இரு தடுப்பூசிகளையும் மத்திய அரசு ஒரு டோஸ்க்கு150 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்தது.

Advertisment

இருப்பினும், சீரம் மற்றும் பாரத் பையோடெக்ஆகிய இரு நிறுவனங்களுமே ஒரு டோஸ்க்கு150 ரூபாய் என்ற கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என தெரிவித்துவந்தன. மேலும், டோஸ்க்கு150 ரூபாய் அளித்தால், தடுப்பூசி உற்பத்தியைஅதிகரிப்பது கடினம் என மத்திய அரசிடம் தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்தநிலையில்மத்திய அரசு, தடுப்பூசிகளின் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதாகஅதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, 66 கோடி தடுப்பூசிகளுக்குமத்திய அரசு ஆர்டர் அளித்திருப்பதாகவும், இந்த ஆர்டரில் ஒரு டோஸ் கோவாக்சினை 225 ரூபாய்க்கும், ஒரு டோஸ் கோவிஷீல்டை 215 ரூபாய்க்கும் மத்திய அரசு வாங்கவுள்ளதாகஅந்த அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.